நபர் ஒருவரின் மிக மோசமான செயல்! – சிசிடிவி காணொளி வெளியானது.

தெஹிவளையில் உள்ள பள்ளிவாசல் மீது மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த நபர் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் கொஹுவல பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நபர் பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்ட சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அத்துடன், விசாரணைகளின் போது சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews