இருவருக்கிடையில் வாய்த் தர்க்கம் குழு மோதலாக மாறியது.ஒருவர் படுகாயம்….!

யாழ்.நாவாந்துறை பகுதியில் இருவருக்கிடையில் உருவான மோதல் குழு மோதலாக மாறிய நிலையில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. இரு நபர்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரு மோட்டார் சைக்கிள்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews