மட்டக்களப்பில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றல்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம், வீச்சுக்கல்முனை, கல்லடி ஆகிய மூன்று இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இறுதி நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் 11, 12 13, ஆகிய மூன்று தினங்களில் ஒன்பது பொதுசுகாதார பிரிவுகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இறுதி நாளான இன்று மட்டக்களப்பு மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்,வீச்சுக்கல்முனை அன்னம்மாள் வித்தியாலயம், கல்லடி விநாயகர் வித்தியாலயம் என மூன்று இடங்களில் முன்னெடுக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews