சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாதயாத்திரையினருக்கும், கப்பல் துறை பாடசாலைக்கும்  உதவி….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிமரத்தால் பாரம்பரியமாக சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து  கதிர்காம கந்தன் ஆலயம் வரை  பாதயாத்திரை செல்கின்ற யாத்திரிகர்களுக்கு திருகோணமலை குச்சவெளி கிராமத்தில் அமைந்துள்ள தான்தோன்றி சித்தி விநாயகர் ஆலயத்தில் வைத்து
மருத்துவப் பொருள்கள், மற்றும்  பொருட்கள் நேற்று திங்கட்கிழமை 27/04/2024. ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று 04ம் கட்டமாக வழங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்திற்கு பாதுகாப்பு வேலி அமைப்பதற்க்காக ரூபாய்  200,000 நிதி உதவி 2ம் கட்டமாக பாடசாலை முதல்வரிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews