தமிழ் பொது வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சற்று முன்னர் ஆரம்பம்..!

தமிழ் பொது வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில்.பிரத்தியேக இடம் ஒன்றில்நகுறித்த கலந்துரையாடல் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக அறியமுடிகிறது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில். பாராளுமன்ற உறுப்பினர்களான  சித்தார்த்தன். செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கட்சி சார்பில். ஸ்ரீகாந்தா. ஜனாநாயக போராளிகள் கட்சி சார்பில் அதன் தலைவர் வேந்தன். ஆகிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் பொது அமைப்புகள் சார்பில். வேலன் சுவாமிகள். அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம். பேராசிரியர் கே ரீ கணேசலிங்கம். அரசியல் ஆய்வாளர். நிலாந்தன், பொருளியல் ஆய்வாளர் சுந்தரேசன் உட்பட பலர் கலந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆறு முப்பது மணியளவில் ஆரம்பமான  கலந்துரையாடல் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அங்கிருந்து தகவல்கள்  வெளியாகியுள்ளது.
 பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews