அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதல் முறையாக ‘Serenade of the Seas’ எனும் உல்லாசக் கப்பல் வருகை

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதல் முறையாக ‘Serenade of the Seas’ எனும் உல்லாசக் கப்பல் திங்கட்கிழமை வருகை தந்துள்ளது.

இந்த கப்பலில் 1,950 பயணிகள் மற்றும் 890 பணியாளர்கள் வருகை தந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த பத்தாவது கப்பல் இதுவாகும்.

2003 ஆம் ஆண்டு முதன் முதலில் கடல்  பயணத்தை ஆரம்பித்த ‘செரினேட் ஒப் தி சீஸ்’  கப்பலை சர்வதேச ரோயல்  கரீபியன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கப்பல் அடுத்த பயணத்தை  கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews