ஜப்பானில் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஒருவர் பலி

ஜப்பானில் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த  ஹெலிகாப்டர்கள் பசுபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டன. ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா 4 பேர் இருந்தனர்.

அப்போது திடீரென இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

7 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews