கரப்பந்தாட்ட போட்டி நிறைவில் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டி நிறைவில் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அண்மையில் நடைபெறவுள்ள இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலில் வரப் போகின்ற பிரதமர் இந்தியாவின் முக்கிய விடயங்கள் ஆயினும் சரி இலங்கை தொடர்பான முக்கிய விடயங்களாயினும் கையாள கூடியவர்களாகவே இருப்பார்கள்.
உலகத்துறை மற்றும் வெளியூர் துறை அமைச்சர் அனைவருமே இலங்கை தொடர்பாக பல்வேறு விடயங்களில் கையாளக் கூடியவர்களாகவே இருப்பார்கள்.
இந்தியாவின் நிதித்துறை மற்றும் உள்ளக துறைகளிலே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அத்துடன் அமையப் போகின்ற இந்தியாவின் புதிய அரசாங்கமானது இலங்கை தொடர்பில் முக்கிய பங்குகளை வகிக்கும். 
அதிகம் கரிசனை காட்டுபவர்களாக இருப்பார்கள் எனவும் இது இலங்கைக்கான புதிய கதவுகளை திறந்து விடும் எனவும் நம்புவதாக தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews