ஐந்து வருடங்கள் சிறப்பாக கடமையாற்றிய அதிபருக்கு நாகர்கோவிலில் பிரிபு உபசார விழா

யா/நாகர் கோவில் மகா வித்தியாலயத்தில் ஐந்து வருடங்கள் அதிபராக கடமையாற்றி இடமாற்றலாகி செல்கின்ற மரியாதைக்குரிய திரு.கு.கண்ணதாசன் அவர்களின் பிரிவு உபசார விழா கடந்த 03.04.2024 புதன் கிழமை யா/நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது

இதன் முதன் நிகழ்வாக இசை வாத்தியங்களுடன் அதிபர் கண்ணதாசன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது

அதனை தொடர்ந்து மாணவர்களாலும்,சமூகமட்ட அமைப்புகளாலும்,ஆசிரியர்களாலும் அதிபர் கெளரவிக்கப்பட்டு அவருக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது

குறித்த நிகழ்விற்கு வடமராட்சி கிழக்கு வலயக்கல்வி கணித பாட ஆலோசகர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்,சமூகமட்ட பிரதிநிதிகள் ஆகியோர் வருகை தந்து விருந்தினராக கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews