சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு

சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் காலை 10:45 மணிக்கு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பஞ்சபுராணம் ஓதப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தி காயங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து ஆச்சிரமத்தின் வாராந்த தர்ம  பணியாக ஒருவருக்கு மலசல கூடம் அமைப்தற்க்கான நிதி உதவியும், கெடுடாவிலில் வருட பிறப்பு கொண்டாட்டத்திற்க்காக ரூபா 25000/- ம் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆச்சிரம தொண்டர்கள், இசைக் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews