பிறந்து ஒரு மாதமும் 20 நாட்களுமான குழந்தையை கோடரியால் வெட்டி கொன்ற தாய்!

ஒன்றரை மாத குழந்தையை கோடரியால் வெட்டிக் கொலை செய்த ஆசிரியையான தாய் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியிருக்கின்றார்.

அனுராதபுரம் – ஷ்ரவஸ்திபுர பகுதியில் நேற்றய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பட்டதாரி ஆசிரியையான 30 வயதுடைய குறித்த தாய், தனது ஒரு மாதமும் 20 நாட்களும் நிரம்பிய குழந்தையை இவ்வாறு வெட்டிக் கொலை செய்துள்ளார்.  

குழந்தையை கொலை செய்த பின்னர், குறித்த தாய், கல்னேவ பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளதாகவும், அங்கு வைத்து அவரை பொலிசார் கைது செய்ததாகவும் அவர் மேலும் கூறினார். இந் நிலையில் கொல்லப்பட்ட குழந்தையின் சடலம்

அனுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சரணடைந்த தாய் விசாரணைகளுக்காக அனுராதபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews