நீதிபதியை அவமதித்ததாக நால்வர் கைது

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து நீதிபதியை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை (04) மாலை மூவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி குஞ்சர்கடைச் சந்திக்கு அருகாமையில் நீதிபதியின் கார் சென்றுகொண்டிருந்த போது  முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர், நீதிபதியை அவமதிக்கும் வகையில் கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருந்த வீதித் தடையில் இருந்த  பொலிஸார் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட  மூவரும் நெல்லியடி, வவுனியா, இணுவில் பகுதிகளைச் சேந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews