தூக்கில் தொங்கிய நிலையில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு..!

வவுனியா – சமனங்குளம் பகுதியில் இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்தனர்.

ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிப்பிரியா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த யுவதியின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews