கடற்கரையில் குளிக்க சென்ற ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போன நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன மற்றையவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews