ஆசிரியர் தினத்தன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர் தினமான எதிர்வரும் 6ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான தடைவந்தாலும் திட்டமிட்டவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டுமாயின் தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கமையவே இந்த போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
312 தொகுதி கல்வி காரியாலயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews