யாழ். கோப்பாய் பகுதியில் கிளைமோர் மீட்பு!

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்றில் கிளைமோர் குண்டு இன்றைய தினம் சனிக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றினை துப்புரவு செய்ய முற்பட்டபோது இரும்பினாலான பொருளை காணி உரிமையாளர் அவதானித்துள்ளார். உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது கிளைமோர் என அடையாளம் கண்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews