மீண்டுமொரு ஈஸ்டர் தாக்குதல்?

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரங்கேறி 5 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் நேற்றையதினம் காத்தான்குடியில்குறித்த தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த தாக்குதல் மற்றுமொருபயங்கர தாக்குதலுக்கு அடுத்த புள்ளியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் அச்சமும் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

காத்தான் குடியில் சஹ்ரானின் அடிப்படைவாதத்தை மீள் உருவாக்கம் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் குற்றச்சாட்டில் 30 இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஒன்றுகூடல் மைதானத்திலும் சந்தேக நபர்களின் வீடுகளிலும் அதிரடிப்படையினர் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews