யாழ். அனலைதீவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இருவர் கைது!

யாழ். அனலைதீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மஞ்சள் மூடைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதில் அனலைதீவு மற்றும் நாவற்குழி பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட மஞ்சள் மூடைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews