கைத்துப்பாக்கியுடன் யுவதி கைது

இயங்கும் நிலையில் உள்ள கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி, இக்கடுவை பிரதேசத்தில் நேற்றையதினம் (26) குறித்த யுவதி  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு, கைத்துப்பாக்கியுடன் யுவதி கைதானபோது அவரிடமிருந்து 5 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த யுவதி திட்டமிட்ட குற்றச் செயல்கள் வலையமைப்புடன் தொடர்புபட்டவரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது, இராணுவத்தில் பணியாற்றிய யுவதியின் மூத்த சகோதரன், கடந்த வருடம் இராணுவத்தில் இருந்து விலகி வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews