செங்கடல் பகுதிக்கு இரகசியமாக கடற்படை கப்பலை அனுப்பிய இலங்கை!

செங்கடல் பகுதிக்கு ரோந்து நடவடிக்கைகளிற்காக மிகவும் இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கை கடற்படையின் கப்பல் தனது கூட்டு ரோந்து நடவடிக்கைகளை பூர்த்திசெய்துகொண்டு இலங்கைக்கு திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பப் எல் மன்டெப் நீரிணைக்கு இலங்கை கடற்படை கப்பல் அனுப்பப்பட்டதை கடற்படை பேச்சாளர் கயன் விக்கிரமசூர்ய உறுதி செய்துள்ளதுடன்,

எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளாமல் இலங்கை கடற்படை கப்பல் ரோந்து நடவடிக்கையை பூர்த்தி செய்துவிட்டு இலங்கை திரும்புகின்றது என தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் இலங்கை கடற்படை முன்னெடுத்த ஆபத்தான இந்த நடவடிக்கையின் இரகசிய தன்மை காரணமாக கடற்படை மேலதிக தகவல்களை வெளியிடவில்லை என தெரியவருகின்றது.

மீண்டும் எப்போது இலங்கை கடற்படை தனது கப்பலை அனுப்பும் என்பது குறித்து இலங்கை கடற்படை எதனையும் தெரிவிக்கவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews