பூனைத்தொடுவாய் லூர்த்து அன்னை ஆலய பெருவிழா

பூனைத்தொடுவாய் லூர்த்து மாதா ஆலய பெருவிழா இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் காலை 07.00 ஆரம்பமான குறித்த திருவிழா நிகழ்வில் திருநாள் திருப்பலியை அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெயராஜ் ஒப்புக் கொடுத்தார்.

தொடர்ந்து லூர்த்து அன்னையின் திருச்சுருபம் பவனியாக எடுத்துவரப்பட்டதோடு அதன்பின் கொடி இறக்கப்பட்டு அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.

லூர்த்து அன்னையின் பெருவிழாவில் பலர் கலந்து கொண்டு இறையாசி வேண்டிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews