வவுனியாவில் கொரோனாத் தொற்றால் மேலும் இருவர் மரணம்.

வவுனியாவில் கொரோனாத் தொற்றால் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவரும், வவுனியா, உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு நேற்று  மரணமடைந்தவர்களாவர்.

மரணமடைந்தவர்களின் சடலங்களைச் சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளைச் சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் கொரோனாத் தொற்றால் மரணமடைந்தவர்களில் 89.25 வீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews