பேத்தியைப் பார்க்கச் சென்ற ஜனாதிபதி……!

அமெரிக்காவில் வசிக்கும் ஜனாதிபதி கோத்தபாயவின் மகன் மனோஜ் –
செவ்வந்தி தம்பதியினருக்கு மூத்த பெண் குழந்தை கடந்த மே மாதம் 08ம் திகதி
பிறந்துள்ளது. துலன்ஜா என பிள்ளைக்குப் பெயரிட்டுள்ளனர். கொரோனா
நெருக்கடி காரணமாக ஜனாதிபதியால் குழந்தை பிறந்த போது பயணம் செய்ய
முடியவில்லை. ஆனால் ஜனாதிபதியின் துணைவியாரான அஜோமா ராஜபக்ஸ
குழந்தை பிறந்த நேரம் அமெரிக்காவிலேயே தங்கியிருந்தார்.
தற்போது ஜ.நா பொதுச் சபைக் கூட்டத்தை காரணமாக வைத்து அமெரிக்கா சென்ற
ஜனாதிபதி பேத்தியையும் பார்த்துள்ளார். ஜனாதிபதி அரசாங்கச் செலவில்
சென்றிருந்தாலும் துணைவியாரின் பயணச் செலவுகள் தனிப்பட்டதாகவே இருந்தது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews