ஓய்வுபெற்ற மருத்துவர் வீட்டில் கொள்ளை! அரியாலையை சேர்ந்த 24 வயதான சந்தேகநபர் கைது…!

யாழ்.கொழும்புத்துறை – இலந்தைக்குளம் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற வைத்தியர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து ஒரு லட்சம் பெறுமதியான ஐபாட் மற்றும் இரு ஐ போன்கள், ஒலி கருவிகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது.

சம்பவத்தில் அரியாலையை சேர்ந்த 24 வயதான ஒருவரே நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர்.

கடந்த 8ம் திகதி இடம்பெற்ற குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான பொலிஸ் குழு மேற்படி சந்தேகநபரை கைது செய்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews