தொண்டைமானாறு சந்நிதி கோவில் கடல் நீரேரியில் சடலம் மீட்பு!

வடமராட்சி – தொண்டமானாறு கடல் நீரேரியில், முதியவர் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்க சென்றவர்கள் சடலம் மிதப்பது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து குறித் இடத்திற்கு விரைந்த பொலிஸார், முதியவரின் சடலத்தை மீட்டனர்.
80 வயது மதிக்கத்தக்க முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆலயத்துக்கு வந்த முதியவர் நீரேரியில் குளிக்க முற்பட்ட சமயம், நீரில் மூழ்கி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews