போராடி வென்றது இலங்கை அணி

சிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (08) இந்த போட்டி நடைபெற்றது.

அதன்படி, போட்டியில் நாணய சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி 208 ஓட்டங்களை பெற்றிருந்தது.

209 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி களமிறங்கியது.

இலங்கை அணியின் ஜனித் லியனகே சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 127 பந்துகளில் 95 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் களம் இறங்கிய துஷ்மந்த சமிர மற்றும் மஹிஷ் தீக்சன ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

அதன்படி, ஜனித்தின் துடுப்பாட்டத்தால் இலங்கை அணி 49 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

அத்துடன், அவர் தனது இனிங்ஸில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் பெற்று, போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews