ஆழிப்பேரலையின் 19ம் ஆண்டு நினைவு வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்திலும்……..!

ஆழிப்பேரலையின் 19ம் ஆண்டு நினைவு தினம் நேற்று  26/12/2023 மாலை 6.00 மணிக்கு வடமராட்சிகிழக்கு வத்திராயன் கிராமத்தில் ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட. மக்கள் நினைவாக அமைக்கப்பட்ட பொது நினைவுத் தூபியில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் சிவபாலசுந்தரம் சிவகுமார் (செல்வன்) தலைமையில் இடம்பெற்றது
பொதுதூபிக்கான மலர் மாலையினை வத்திராயன் கிராம அலுவலர் அணிவித்தார்.   அதனைத்தொடர்ந்து பிரதான பொதுச்சுடரினை ஆழிப்பேரலையின்போது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் பேரக்குழந்தை என ஐந்து பேரை இழந்த. செல்லமாணிக்கம் குணராசலிங்கம் ஏற்றிவைத்து மலர் அஞ்சலிசெலுத்தினார்.
  தொடர்ந்து ஏனையவர்கள் சுடர்களை ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்
இன் நிகழ்வில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews