கிளிநொச்சியில் கைதான வன்முறைக் கும்பல் தெல்லிப்பளை பொலிசாரிடம் ஒப்படைப்பு!

கடந்த திங்கள்கிழமைதெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் மற்றும் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன இன்றைய தினம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் தெல்லிப்பளை பொலிசாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் விசேட அணியினரால் கிளிநொச்சி பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த வன்முறை கும்பல் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டதோடு இன்றைய தினம் மேலதிக சட்டநடவடிக்கைக்காக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews