![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/09/Maranam-2.jpg)
யாழ்.வடமராட்சி – நவிண்டில் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் திடீர் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளதாக தொியவருகின்றது.
நேற்று முன்தினம் இரவு இவர் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் திருமணம் முடித்த நிலையில் மிக விரைவில் கணவரிடம் செல்லவிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த பெண் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றவர் எனவும் கூறப்படுகின்றது.
சம்பவத்தில் நவிண்டில் பகுதியைச் சேர்ந்த தவேந்திரன் துளசிகா வயது 37 என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.