இலஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

கந்தானை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணைகுழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கந்தானைப் பகுதியில் நேற்று (30.11.2023) இலஞ்சப் பண தொகையை பெற்றுக்கொள்ள சென்ற போதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸாரின் தலையீடு இன்றி கந்தானை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்துவதற்கு 1 இலட்சம் ரூபாவை கோரியதுடன், அதற்கான முதல் தொகையான 75,000 ரூபாவை பெற்றுக்கொள்ளச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews