மின்சாரம் தாக்கி 27 வயதான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! –

கிளிநொச்சி – அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராஜன் குளம் வைத்தியசாலை வீதியில், மின்சாரம் தாக்கி 27 வயதான. பேரம்பலநாதன் கேசவன் என்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறிய பொட்டிக்கடை ஒன்று அமைப்பதற்காக வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கிய நிலையில் அக்கராஜன்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த குறித்தநபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக அக்கராஜன் குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews