மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறித்து எதுவும் கூற முடியாது என்கிறார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டால், அதனை, தான் தனித்து எதிர்கொள்ள நேரிடும் என, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில், சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில், ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்ட போது. இவ்வாறு குறிப்பிட்டார்.
மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில், சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறியக் கிடைத்துள்ளது. எனவே, அது குறித்து, தற்போது கருத்து வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது.
எனவே, இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதில் இருந்து, நான் விலகிக் கொள்கின்றேன். இது குறித்த கேள்விகளை தொடர்ந்தும் கேட்டு, என்னை அசௌகரியத்திற்கு உட்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன்.
காரணம், என்னால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய, சட்ட ரீதியான நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துவதாகக் காணப்பட்டால், நான், தனித்து தான், அதற்கு முகங்கொடுக்க வேண்டும். எனவே, என்னால் இதுபற்றி எதனையும் கூற முடியாது.
என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews