பரிசு கொடுக்க வந்ததாக கூறி மூதாட்டியின் 5 பவுண் தங்கச் சங்கிலி அபகரிப்பு!

திருகோணமலை – துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன்  வீதியில் இன்று காலை சுமார் பதினொரு மணியளவில் பரிசு கொடுக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் வந்த வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்த முதாட்டியிடம் இருந்து ஐந்து பவுண் தங்க செயினை அபகரித்து சென்றுள்ளதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.
இலக்கத்தகடு இல்லாத இருசக்கரவாகனத்தில் வந்த ஒரு இளைராஞரால் மேற்படி கொள்ளை இடம்பெற்றதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையனை துரத்திச்சென்ற ஒருவரின் தகவலின் அடிப்படையில் தேடுதல் நடைபெறுவதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews