திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி யாழ்.கொடிகாமத்தில் ஆரம்பம்

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில், திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் இன்று ஆரம்பமானது.

வடக்கு முழுவதும் செல்லவுள்ள இந்த எழுச்சி ஊர்திப் பவனி கொடிகாமத்திலிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து, கிளிநொச்சியை வந்தடைந்து 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews