பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி திருட்டு!

கட்டுகஸ்தோட்டை – வட்டரந்தென்ன பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தராக தம்மை அடையாளப்படுத்தி பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் பக்கமூன பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர், சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews