போலி இணையத்தளம் ஊடாக நிதி மோசடி!

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தபால் பொதிகளை வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என தபால் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப உதவிப் பணிப்பாளர் காயத்ரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் குறித்து 1950 எனும் இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews