ஜப்பான் செல்லவுள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகல்! –

இலங்கை உள்ளிட்ட கறுப்பு பட்டியலிலுள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு நாளைமுதல் ஜப்பான் நாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவலின் அதிகரிப்பினால், ஜப்பானின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சில நாடுகளுக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews