முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாங்கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்….!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாங்கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.

முல்லைத்தீவு மு/செம்மலை மகா வித்தியாலயத்தி 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரண்டாங்கட்ட சைனோபோர்ம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 16.10.2021 நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இந் நிலையில் பெருந்திரளான மக்கள் இரண்டாங்கட்டத் தடுப்பூசியை ஆர்வத்துடன் ஏற்றிக்கொள்வதை அவதானிக்கமுடிந்தது.

மேலும் குறித்த இரண்டாங்கட்ட சைனோபோர்ம் தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாட்டை முல்லைத்தீவு பிராந்திய சுகாதார பணிமனை இராணுவம் மற்றும் இராணுவ வைத்தியர்கள் இணைந்து முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews