யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 155 பேருக்கு கொரோனா தொற்று! 3 மரணங்களும் பதிவானது.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 155 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. 

இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனையில் 22 தொற்றாளர்களும், அன்டிஜன் பரிசோதனைகளில் 133 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் மாவட்டத்தில் 3கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளது.

இதேபோல் மாவட்டத்தில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 15630 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 356 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews