இயற்கை மாதிரி தோட்டத்தை முன் மாதிரியாக செய்து காட்டிய உவர் மலை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

Vanni Hope Australia நிறுவனத்தின் நிதி உதவியில் Trinco Aid இனால் இயற்கை வழி பாடசாலை தோட்டம் உவர் மலை விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டது. அதன் பலன் இன்று அக் கல்லூரி மாணவர்களால் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு விற்கப்பட்டது. இதே போன்று திருமலை நகரில் 5 பாடசாலைகளில் பாடசாலை தோட்டம் அமைக்கப்பட்டது. அவர்களும் சிறப்பாக தமது தோட்டத்தினை செய்து வருகின்றார்கள்.

இத் தோட்டததினை சிறப்பாக செய்ய உதவிய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள். உங்கள் செயற்பாடு தொடர்ந்து நடைபெற்று மேலும் உங்கள் பாடசாலை தோட்டம் விரிவாக எமது ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கப்பெறும்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews