மட்டக்களப்பு நகர் கருவப்பங்கேணியில் 70 ஆயிரத்து 250 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் கைது…!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் பிரபல கசிப்பு கஞ்சா வியாபாரி உட்பட இருவரை 70,250 மில்லி லீற்றர் கசிப்புடன் இன்று புதன்கிழமை (15) பகல் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பு அதிகாரி சாஜன் ரி.கிருபாகரன் தலைமையிலான பொலிசார் குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை சம்பவதினமான இன்று பகல் முற்றுகையிட்டனர் இதன் போது வியாபாரத்துக்காக வைத்திருந்த இருவரை கைது செய்ததுடன் 70 ஆயிரத்து 250 மில்லி லீற்றர் கசிப்பை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட அந்த பகுதியைச் சேர்ந்த பிரபல கசிப்பு கஞ்சா வியாபாரி பல கஞ்சா மற்றும் கசிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வந்துள்ளதுடன் இவருக்கு எதிராக பல வழக்குகள் இருப்பதாகவும் இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews