கிளிநொச்சியில் 18 வயது மாணவி சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் – புன்னைநீராவி பகுதியில் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

நேற்றைய தினம் குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள்ளிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதான கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட மாணவியின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews