வங்கிக்குள் புகுந்த நாகபாம்பினால் பரபரப்பு 5 மணி நேர போராட்டத்தில் பாம்பை பிடித்தனர் – அம்பாறை தம்பிலுவில் சம்பவம்

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இலங்கை வங்கிக்குள் பாம்பு ஒன்று உட்புகுந்ததல் அங்கு பெரும் பரபரப்பை எற்பட்டதுடன் பொலிசாரின் உதவியுடன் சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாம்பை அங்கிருந்து அகற்றிய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (6) மாலை இடம்பெற்றள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வங்கி சம்பவதினமான நேற்று பூட்டிய நிலையில் மாலை 4 மணிக்கு வங்கிக்குள் நாக பாம்பு ஒன்று உட்புகுந்துள்ளது இதனையடுத்து அந்தபகுதி மக்கள் அங்கு ஒன்று கூடியதையடுத்து அங்கு வங்கி முகாமையாளர் வங்கியை திறந்து அங்கிருந்து பாம்பை அகற்ற பொலிசாருடன் இணைந்து முயற்சித்து பயனளிக்காத நிலையில்  பாம்பு பிடிப்பர்களை வரவழைத்தும் அவர்களால் அதனை பிடிக்க முடியாது  இரவு 9 மணிவரை 5 மணித்தியால போராட்டத்தின் பின்னர் பாம்பை பிடித்து கொண்டு சென்று வெளியே விட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews