புங்குடுதீவு பாலத்தில் விபத்து..!

புங்குடுதீவு வாணர் பாலத்தின் ஊடாக பயணித்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பாலத்தின் ஊடாக உழவு இயந்திரம் பயணித்த போது திடீரென சரிந்து வீழ்ந்து போனமையினாலேயே இவ்வாறு விபத்து இடம்பெறறதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்பாலமானது அறுபது ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது . புங்குடுதீவு மக்களின் நிதியில்  அமைக்கப்பட்ட ஐந்து கிலோமீற்றர்  நீளமான இக்கடற்பாதையில் பயணிப்பவர்கள் வார்த்தைகளினால்  கூறமுடியாதளவுக்கு துன்பங்களை அனுபவித்துவருகின்றனர்.
புங்குடுதீவு, நயினாதீவு ,  நெடுந்தீவுக்கு இப்பாலத்தினூடாகவே ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர் .

Recommended For You

About the Author: Editor Elukainews