கிளிநொச்சி மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கு இரண்டு கட்டத் தடுப்பூசிகள்….

கிளிநொச்சி மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கு இரண்டு கட்டத் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை, 60 ஆயிரம் பேருக்கு ஒரு தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews