மன்னார் தாராபுரம்  துருக்கி சிட்டி  பகுதியில் அமைந்துள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்திற்கு ஒரு தொகுதி அத்தியாவசிய பொருட்கள் கையளிப்பு

மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டி   பகுதியில் அமைந்துள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்களிற்கதகாக  அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் நூறு மற்றும் சுகாதார பொருட்கள் உள்ளடங்களாக ஒரு தொகுதி பொருட்கள் இன்றைய தினம் (14) செவ்வாய்க்கிழமை காலை கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேவ சபைகளின் வட பிராந்திய  சங்கத்தின் ஏற்பாட்டிலேயே இப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது
 மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் , வட பிராந்திய தேவ சபையின் ஊழியர்களினால் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது வைத்திய கலாநிதி ரி.ஒஸ்மன் டெனி மற்றும் வைத்திய கலாநிதி திருமதி சிறிமதி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews