வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

வாகனங்களுக்காக ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான எரிபொருள் ஒதுக்கீடு 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 22 லீற்றராகவும், கார் மற்றும் சிற்றூந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40 லீற்றராகவும், பேருந்து மற்றும் பாரவூர்திகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 125 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews