பருத்தித்துறையில் வறிய குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு!

வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 18 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி ஸ்ருற்காட் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘உறவுகளுக்கு கரம் கொடுப்போம்’ அமைப்பின் நிதி பங்களிப்புடன் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் அனுசரணையுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமரர் வைத்திலிங்கம் அம்பலம் அவர்களது 22வது நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (20) இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரது நினைவு சுமந்து அவரது பிள்ளைகளால் யாழ்பாணம், வடமராட்சி பிரதேச செயலகப்பிரிவில் கரகம்பனை என்ற இடத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருபவர்களில் தெரிவு செய்யப்பட்ட 18 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

தலா 1,800 ரூபா பெறுமதியான உலருணவு பொதிகள் தெரிவு செய்யப்பட்ட 18 குடும்பங்களுக்கு இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி ஸ்ருற்காட் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘உறவுகளுக்கு கரம் கொடுப்போம்’ அமைப்பின் யாழ் மாவட்ட செயற்பாட்டாளர் ஆனந்தபவன் தலைமையில் முன்னெடுக்கக்கப்பட்ட குறித்த திட்டத்திற்கு யாழ். வடமராட்சி ஊடக இல்லம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews