மட்டக்களப்பு கிரானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டக்களப்பு கிரான் பிள்ளையார் ஆலய முன்றில் ‘கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’  எனும் தலைப்பில் இன்று வியாழக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் உயிர்நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றிஅ ஞ்சலி செலுத்தினர்.

தமிழரசு கட்சி கிரான் கிளை தலைவர் சி.சண்முகநாதன்  ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் ஆலய குரு, கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு உயிர்நீத்தவர்களுக்கு  ஆத்மசாந்திவேண்டி சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் கஞ்சி வழங்கிவைத்தனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews