மட்டு குருக்கள் மடத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 3 பேர் கொண்ட இளைஞர் குழுவை சுற்றிவளைப்பு ஒருவர் மடக்கி பிடிப்பு இருவர் தப்பி ஓட்டம் !!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குருக்கள்மடம் பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடாடிய 3 பேர் கொண்ட இளைஞர்கள் கொண்ட குழுவை பொதுமக்கள் சுற்றிவளைத்தபோது இருவர் தப்பி ஓடிய நிலையில் ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை மடக்கிபிடித்து நப்புடைப்பு செய்த நிலையில் பொலிசாரிடம்  ஒப்படைத்த சம்பவம் நேற்று புதன்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு பிரதானவீதி குருக்கள்மடம் வீதி வளைவை அண்மித்த வீதியில் சம்பவதினமான நேற்று பிற்பகல் 2 மணிக்கு சந்தேகத்துக்கு இடமாக 3 இளைஞர்கள் நடமாடிக் கொண்டிருப்பதை அந்தபகுதி மக்கள் அவதானித்த நிலையில் அவர்கள் சிறுவர்களை கடத்தும் கும்பல் என அவர்களை சுற்றி வளைத்தனர்..

இதன் போது அங்கிருந்த இரு  இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து ஒருவனை பொதுமக்கள் மடக்கிபிடித்து நப்புடைப்பு செய்த நிலையில் பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews